மட்டக்களப்பு
ஏர் பூட்டி சோறு ஊட்டும் வள நாடாம் மட்டக்களப்பின் தென்பால் இயற்கை எழில் கொஞ்சும் கிரான்குளம் என்னும் பதியில் எங்கள் பாடசாலை அமைந்துள்ளது. இங்கு இடைநிலை மற்றும் உயர்தர மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பிரத்தியேகமான அலகும் இங்கு காணப்படுகின்றது. எமது பிராந்தியத்தில் கல்வி, விளையாட்டு, இணைப்பாடவிதான செயற்பாடுகள் போன்றவற்றில் முன்னிலை வகிக்கும் பாடசாலைகளில் எமது பாடசாலையும் ஒன்றாகும்.
துரிதமாக மாறிவரும் தற்கால உலகிற்கேற்ப சவால்களை எதிர்கொள்ளும் ஆளுமையுள்ள நற்பிரஜைகளை நாட்டுக்குப் பெற்றுக் கொடுக்கும் சமூகம்.
சமூகத்திலும், கலைத்திட்டத்தின் ஊடாகவும் பெற்றுக்கொண்ட அனைத்து வளங்களையும் பயனுடையதாக்கித் தேசிய கல்வி முறைக்கு ஏற்புடையதாகிய மனிதகௌரவத்தை கண்ணியப்படுத்தும் சவால்களை ஏற்றுக் கொள்ளும் நற்சமூகத்தை உருவாக்குதல்.